Tuesday, July 10, 2012

மழை

 அந்தி மயங்கும் மாலை நேரம்
அழகுத் தூரலில் நனைந்ததென் தேகம் 
இதயம் விரிந்து மனம் உவந்தேன் 
இதழை சிப்பியை போல் திறந்தேன் 
மழை முத்தை சுவைத்து உயிர்த்தேன்

கருமேக அழகன் திடமுடன் தோன்ற 
சூரிய மங்கை நாணி மறைய
அவள்தன் கரத்தை விரித்து அழைக்க 
மேகனோ ஆசையில் கரைந்து உருக
உருகினேன் நானும் காட்சியை கண்டு 

நதிநீர் எங்கும் தங்கம் வார்க்க 
மழைநீர் பட்டு துளியாய் தெறிக்க 
கையில் துளியை ஏந்தி பிடிக்க 
கம்மல் ஆக்கி அணிய நினைக்க 
வெள்ளித் தண்ணீர் கையில் நகைத்தது.....  
      

தமிழா? நீயா?


அமுதை உண்டு அமுதை உண்டு
மயங்கும் வண்டைபோல்
உனைப்பற்றி  
கவிதை  எண்ணி கவிதை எண்ணி
இன்றென் உறக்கமும் ஒருவிதமான
கிறக்கத்துடனே செல்கிறது.
கிறக்கம் தரும் மோடி வித்தை செய்வது
தமிழா? நீயா?

எவ்வளவு பிடிக்கும்

உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்?
விடை காண முனைந்தேன்.
விளைவாய் கவிதை புனைந்தேன்...

அடிவானத்தை  தொட  எவ்வளவு
அடிவைக்க  வேண்டுமோ அவ்வளவு ...
அம்புலியில்  இறங்க  எவ்வளவு
ஆகாயத்தில் பறக்கவேண்டுமோ அவ்வளவு...
அண்டத்திற்கு  எல்லைகாண எவ்வளவு
அப்யாசம் செயவேண்டுமோ அவ்வளவு ...
ஆம்... அவ்வளவு பிடிக்கும்.

- பி.ஸ்வர்ண லக்ஷ்மி