அந்தி மயங்கும் மாலை நேரம்
அழகுத் தூரலில் நனைந்ததென் தேகம்
இதயம் விரிந்து மனம் உவந்தேன்
இதழை சிப்பியை போல் திறந்தேன்
மழை முத்தை சுவைத்து உயிர்த்தேன்
கருமேக அழகன் திடமுடன் தோன்ற
சூரிய மங்கை நாணி மறைய
அவள்தன் கரத்தை விரித்து அழைக்க
மேகனோ ஆசையில் கரைந்து உருக
உருகினேன் நானும் காட்சியை கண்டு
நதிநீர் எங்கும் தங்கம் வார்க்க
மழைநீர் பட்டு துளியாய் தெறிக்க
கையில் துளியை ஏந்தி பிடிக்க
கம்மல் ஆக்கி அணிய நினைக்க
வெள்ளித் தண்ணீர் கையில் நகைத்தது.....